இலங்கையில் மீண்டும் எரிபொருள் வரிசையா ?

வரும் ஓகஸ்ட் மாதம் வரை இலங்கையில் போதுமான எரிபொருள் கையிருப்பு இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது .

இது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்ததாவது
நவம்பர் மாதம் வரை தேவையான எரிபொருள் கொள்வனவுகளுக்கான முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதோடு
அமெரிக்காவிலிருந்து 90,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் ஒன்று இந்த மாதம் 28 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாகவும் , மற்றொரு மசகு எண்ணெய் கப்பல் இம்மாதம் 31 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் எரிபொருள் நுகர்வு குறைந்துள்ளதாகவும் மயூர நெத்திகுமாரகே இதன்போது சுட்டிக்காட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *